Mood  வினைச்  சொல்லின்  நிலை  என்றால்  என்ன?

                Mood  is  the  mode  or  manner  in  which  the  action  denoted  by  the  verb  is  represented

                எந்த  வழியில்  வினைச்  சொல்லின்  வடிவம்  காட்டப்படுகிறதோ  அது  ‘ Mood’  எனப்படும்.

Mood : மூன்று  வகைப்படும்.

1. Indicative  mood  –  தேரி  நிலை 

   நடப்பதை  அவ்வாறெச்  சொல்வது.
For  Ex  :
            Kannan  goes  to  Library  daily
            கண்ணன்  தினமும்   நூலகம்  செல்கிறான்.
            He  is  alive.
            அவன்  உயிரோடு  இருக்கிறான்.

கேள்வி  கேட்க………….

For  ex  :
             Have  you  found  your  pen ?
            உன்னுடைய  பேனாவை  கண்டாயா?

நிஜமாக  பாவித்தல் ……….

For  example  :
                  If  you  miss  the  bus, you  can’t  attend  the  meeting
                  நீங்கள் பஸ் மிஸ் செய்தால், நீங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.

2. Imperative  mood :  கட்டளை  நிலை 

கட்டளையிட  :

For  Ex  :
             Sit  there 
             அங்கே  உட்கார் 
             
             Come  here
             
             இங்கே  வா 

அறிவுரை  கூற :

For  Example :
                      Take  care  of  your  health 
                      உன்னுடைய  உடல்நிலையை  கவனித்துக்கொள் 

வேண்டுதலாக  –  பிராத்தனையாக 

For  Ex :
              Have  mercy  upon  us
              எங்களிடம்  கருணை  கொள்ளுங்கள் 
             சாதாரணமாக, ‘ Imperative  mood  -னை  கட்டாயமாக  ‘ Second  person ‘ -ல் 
மட்டுமே  பயன்படுத்த  இயலும்.
             ஆனால்  First  மற்றும்  Third  person -ல்  let  பயன்படுத்தி  கட்டளை  நிலை  கொண்டு  வரலாம்.
                       Let  us  go  
                      நாம்  போகலாம்.

3. Subjunctive  mood  –  கற்பனை  நிலை 

விருப்பத்தை  வெளிப்படுத்த :

For  Ex  :
             Good  be  with  you
             கடவுள்  உன்னோடு  இருக்கட்டும்.

நிஜத்திற்கு  மாறாக  நிபந்தனையுடன் :

For  Ex :
            Had  I  seen  him  I  would  have  advised  him.
           நான்  அவனை  பார்த்திருந்தால்  அவனுக்கு  அறிவுரை  கூறி  இருப்பேன்.
( ஆனால்  பார்க்கவில்லை ),

By Karthik