1. மாதவிடாயின் முதல் நாளிலிருந்து 3 நாள்களுக்கு உப்பு சேர்த்து, பால் அல்லது மோர் சாதம், கறிவேப்பிலை, புதினா மல்லி இவற்றில் ஏதேனும் ஒரு துவையலுடன் சாப்பிடலாம்.
2, சிறுபருப்பு சேர்த்த சாம்பாரில், இஞ்சி, பூண்டு, பெருங்காயம் அதிக அளவில் சேர்த்து, அரை உப்புடன் சாதம் சாப்பிடலாம்.
3. பச்சை சுண்டைக்காயுடன் சிறுபருப்பு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து, உப்பு குறைத்து, குழம்பு செய்து உட்கொள்ளலாம்.
4, மாதவிடாயின் போது, மாதுளம்பழம், சாத்துக்குடி, திராட்சை இவற்றின் ஜூஸ் ஒன்றினை ஒரு வேளை உணவாகக் கொள்ளலாம்.
5. மாதவிடாயின்போது வெள்ளரி, வெள்ளைப் பூசணி, சுண்டைக்காய், வெண்டைக்காய், பீட்ரூட், கோவைக்காய், கேரட், முள்ளங்கி, சிறுகீரை, பொன்னாங்கண்ணி, கரிசாலை, பொடுதலை, முடக்கத்தான் ஆகியவற்றை உணவில் பக்குவமாய்ச் சேர்த்துக் கொள்ளலாம்.
மாதவிடாயில் வயிற்று வலியா? கீழ்க்கண்டபடி வெண்பூசணி ஜூஸ் தயார் செய்யுங்கள்; சாப்பிடுங்கள்; வலி பஞ்சாய்ப் பறந்து போகும்.
வெண்பூசணி ஜூஸ்
வெள்ளைப் பூசணி 100 கிராம்
வெள்ளரி விதை 10 கிராம்
சாம்பார் வெங்காயம் 2 எண்ணிக்கை
வெள்ளை மிளகு 5 கிராம்
பனங்கற்கண்டு 100 கிராம்
பூண்டு 2 பல்
இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்துக் காலை-மதியம்-இரவு மூன்று வேளையும் 50 மி.லி. அளவில் சாப்பிட, மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுவலி தீரும்.
வேறொரு முறை
கல்லுப்பு 10 கிராம்
பிரண்டை 1 துண்டு 25 கிராம்)
இந்துப்பு 10 கிராம்
ஓமம் 10 கிராம்
சுக்கு 10 கிராம்
பூண்டு 20 கிராம்
பெருங்காயம் 10 கிராம்
பனைவெல்லம் 50 கிராம்
இவையனைத்தையும் ஒன்று சேர்த்து மைய அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் பட்டாணி அளவு மூன்று வேளையும் சாப்பிட, வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல் ஆகியன தீரும்.
பெண்களே! மாதவிடாயில் தேவையான அளவில் இரத்தம் வெளிப்பட
சில டிப்ஸ்:
மாதவிடாயில் குறைவான இரத்தப்போக்கு உடையவர்கள், இரத்தத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளையும், இரத்தச் சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் கண்ட 22-வது நாளிலிருந்து, கீழ்க்கண்ட உணவுகளை மிதமாக உண்டுவர மாதாந்திரச் சுழற்சியில் உதிரப்போக்கு சீராக இருக்கும்.
1. முருங்கைக்கீரை 2. அகத்திக்கீரை 3.மணத்தக்காளி
4.பசலைக்கீரை 5, பிரண்டை, 6. ஆவாரம்பூ, 7, பாகற்காய்,
8.கொத்துமல்லி, 9 சுண்டைக்காய், 10. முருங்கைக்காய்,
11.பப்பாளிப்பழம் 12. அன்னாசிபழம், 13. பேரீச்சம்பழம் 14 அத்திப்பழம்
போன்றவற்றைத் தேவையான அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள 28 முதல் 30 நாட்களுக்குள் மாதவிலக்கு ஏற்பட்டு, சீரான அளவில் உதிரப்போக்கு காணப்படும்.
மாதவிலக்கை ஒழுங்குப்படுத்த கீழ்க்கண்ட கசாயம் செய்து சாப்பிடுங்கள். 50 10 ரூபாய் செலவில் 100 வயது வாழலாம்.
அசோகா கசாயம்
அசோகப்பட்டை 20 கிராம்
மருதம் பட்டை 10 கிராம்
ஆவாரம்பூ 10 கிராம்
திரிகடுகு 10 கிராம்
திரிபலா 10 கிராம்
இவையனைத்தையும் தூள் செய்து, 1 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, பாதியாக சுண்டவைத்து, காலை மதியம் இரவு சாப்பிட மாதவிலக்கு சீராக வரும்.
மாத விடாய் அதிக இரத்தப்போக்கா…? கீழ்க்கண்ட குறிப்புக்களைப் பாதுகாத்து வைக்கவும்.
அதிக உதிரப்போக்கு நீங்கும்.
1. 3 கிராம் மாம்பருப்பைப் பாலில் அரைத்துச் சாப்பிட,
2. 3 கிராம் நாவல் கொட்டையைப் பாலில் அரைத்துச்
சாப்பிட உதிரம் கட்டுப்படும்.
3. மாதுளம் பழத்தோலை 5 கிராம் அளவில் அரைத்து,
புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.
4. கொய்யா துளிர் இலை மாதுளம் துளிர் இலை
மாந்துளிர் இலை மூன்றையும் ஒன்றாய் அரைத்துப் புளிப்பு மோரில் சாப்பிட
மாதவிலக்கில் அதிக இரத்தப்போக்கு நிற்கும்.
5. மாம்பூ, மாதுளம்பூ, வாழைப்பூ மூன்றையும் சம அளவு எடுத்து சிறிது உப்பு, புளி, மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து அரைத்து, உணவுடன் துவையலாகச் சாப்பிட உதிரப்போக்கு நிற்கும்.
6. மாதவிடாய்க் கண்ட மூன்றாம் நாளில் வாழைப்பூ, பச்சை சுண்டைக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றைக் காரமில்லாமல் சேர்த்துக் கொண்டால் உதிரப்போக்கு நிற்கும்.!
பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்களுக்கும் மேற்கண்ட அனைத்து உணவு முறைகளும் பொருந்தும்.
ஆகவே மங்கையரே உங்கள் நலம் உங்கள் கையில். சரியான உணவைத் தேர்ந்தெடுங்கள். அதுவே நோய் நீக்கும் மருந்து………….
Wow
nice